நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், இதற்கு முன்பாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய நாடுகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1959ஆம் ஆண்டு, அப்போது சோவியத் ரஷ்யா என்ற அழைக்கப்பட்ட ரஷ்யா முதல் முதலில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலத்திற்கு லூனார் 2 என பெயரிடப்பட்டது. இது கடினமாக தரையிறங்கிய விண்கலம் ஆகும். இதையடுத்து, 1966ஆம் ஆண்டு, நிலவுக்கு மீண்டும் ஒரு விண்கலத்தை ரஷ்யா அனுப்பியது. அதற்கு லூனார் 16 என பெயரிட்டது. இந்த விண்கலம் மென்மையாக தரையிறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஷ்யா 23 முறை நிலவுக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளது.
6 விண்வெளி திட்டங்கள் மூலம் 12 பேரை நிலவுக்கு அனுப்பிய ஒரே நாடு அமெரிக்கா மட்டும் தான். 1969இல் அப்போலோ 2 மூலம், நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்டரினை நிலவுக்கு அனுப்பியது அமெரிக்கா. அப்போலோ திட்டங்கள் மூலம் 1969 முதல் 1972 ஆம் ஆண்டு வரை 6 முறை நிலவுக்கு அமெரிக்கர்கள் சென்றுள்ளனர். அதில் அப்போலோ 13 மட்டுமே தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
சீன நிலவு ஆய்வுத் திட்டம் 2007-ல் Chang’e 1 என்ற பெயரில் தொடங்கப்பட்டது. நிலவின் மிகத் துல்லியமான 3D வரைபடத்தை உருவாக்குவதே சீனாவின் நோக்கம். 2019ஆம் டிசம்பரில், “யுடு” ரோவர் மூலம் சந்திரனில் மெதுவாக தரையிறங்கிய 3-வது நாடானது சீனா. மொத்தமாக, சீனா 7 முறை நிலவு பயணங்களை முடித்துள்ளது. 2030ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. தற்போது நிலவை ஆய்வு செய்யும் பணியில் இந்தியா 4-வது நாடாக இணைந்துள்ளது.