ஆந்திர மாநிலத்தில் இருக்கும் அம்பாவரம் எனும் கிராமத்தில் கடந்த 2021 இல் சாக்கடை கால்வாயில் ஒரு சிறுமியின் பிணம் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் கிடந்து போலீசாரால் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த சிறுமியின் உடலானது மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உடற்கூறு ஆய்வில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இத்தகைய நிலையில், சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பக்கத்து வீட்டுக்காரரான டி.சித்தையா எனும் உறவினர் சிறுமியை கற்பழித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
சிறுமியிடம் பணம் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமி கத்தி கூச்சலிட்ட காரணத்தால் அருகில் இருந்த கட்டையை எடுத்து சிறுமியை அடித்து கொன்று சாக்கடையில் வீசி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதன் பின் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் தற்போது அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.