திருமணம் செய்து வைக்க தவறிய தாயை கொடூரமான முறையில் மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டத்தை அடுத்த பண்டா மைலாரம் என்ற கிராமத்தில் 45 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், மகனும் உள்ளனர். இந்நிலையில், தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க தாய் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மகன் தனது தாயிடம் பலமுறை கேட்டும் அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த மகன், பெற்ற தாய் என்றும் பாராமல் செங்கல்லால் துடிதுடிக்க கொலை செய்துள்ளார். பின்னர், காவல்துறையை குழப்புவதற்காக கழுத்தை அறுத்து கால்களை வெட்டி இருக்கிறார். இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகள், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தியதில் பெற்ற தாயை மகனே அடித்துக் கொன்றது தெரியவந்தது. மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். கைதான இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.