fbpx

Crime | திருமணம் செய்து வைக்காமல் இழுத்தடித்த தாய்..!! ஆத்திரத்தில் துடிதுடிக்க கொன்ற மகன்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

திருமணம் செய்து வைக்க தவறிய தாயை கொடூரமான முறையில் மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டத்தை அடுத்த பண்டா மைலாரம் என்ற கிராமத்தில் 45 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், மகனும் உள்ளனர். இந்நிலையில், தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க தாய் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மகன் தனது தாயிடம் பலமுறை கேட்டும் அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த மகன், பெற்ற தாய் என்றும் பாராமல் செங்கல்லால் துடிதுடிக்க கொலை செய்துள்ளார். பின்னர், காவல்துறையை குழப்புவதற்காக கழுத்தை அறுத்து கால்களை வெட்டி இருக்கிறார். இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகள், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தியதில் பெற்ற தாயை மகனே அடித்துக் கொன்றது தெரியவந்தது. மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். கைதான இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

Aavin | ஆவின் நிறுவனத்தின் ஸ்வீட்டான அறிவிப்பு..!! தீபாவளிக்கு களைகட்ட போகுது..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

Fri Aug 25 , 2023
தருமபுரி மாவட்டம் ராமியண அள்ளியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். அப்போது அவர் கூறுகையில், ”ஆவின் தயாரிப்பு பொருட்களான பட்டர், சீஸ், பனீர் உள்ளிட்டவை தரமானதாகவும், சுவையானதாகவும் உள்ளதால் அதன் தேவைகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். இதனால் மேலும் உற்பத்தியை அதிகப்படுத்தவும், கூடுதலாக சந்தைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். ஆவின் பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், கடந்த தீபாவளி பண்டிகையை விட நடப்பாண்டில் […]

You May Like