fbpx

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த அலைமோதும் கூட்டம்..!! போலீசார் பலத்த பாதுகாப்பு..!!

நடிகர் விஜயகாந்தின் இழப்பு இந்தியளவில் ஈடு செய்ய முடியாதது என்று பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் மற்றும் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தவர் விஜயகாந்த். இருப்பினும் அவரது தேமுதிக கட்சி உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்கு நல்ல உடல்நிலையில் இருந்தபோது செய்த பணிகள் காரணமாக அமைந்துள்ளன.

அரசியலிலும் திறம்பட செயல்பட்ட விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை அவர் காலமானார்.

இந்நிலையில், நேற்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடல், இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டுவரப்பட்டது. இங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணியளவில் தீவுத்திடலில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு தொடர்ந்து அரசியல் தலைவர்களும், நடிகர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

Chella

Next Post

’அந்த 2 நிமிஷத்துல அத்தனை பேரையும் விரட்டி பூ மாதிரி கூட்டிட்டு போனாரு’..!! நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்..!!

Fri Dec 29 , 2023
நடிகர் விஜயகாந்தின் இழப்பு இந்தியளவில் ஈடு செய்ய முடியாதது என்று பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை அவர் காலமானார். விஜயகாந்த்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள […]

You May Like