இன்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றுவருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இடையே நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. 215 ரன்களை இலக்காக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. 3 பந்துகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்யத்தொடங்கியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஆட்டம் மீண்டும் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கோப்பையை வெல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் 117 பந்துகளில் 211 ரன்கள் எடுக்க வேண்டி உள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆட்டம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்றைய தினம் மழை பெய்ததால், போட்டி இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இன்றும் மழை பெய்வதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மழை விட்ட பிறகு போட்டி மீண்டும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Post
குஜராத் கோட்டையில் மகுடம் சூடிய சிஎஸ்கே!... 5வது முறையாக கோப்பையை தட்டி தூக்கிய மஞ்சள் படை!
Tue May 30 , 2023
You May Like
-
2024-02-16, 6:36 am
இன்று டெல்லி செல்கிறார் அண்ணாமலை!… கூட்டணி குறித்து கட்சி தலைமையுடன் ஆலோசனை!
-
2024-07-26, 6:38 am
சற்றுமுன்… தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!