fbpx

வாடிக்கையாளர்களே..!! திடீரென போராட்டத்தில் குதிக்கும் வங்கி ஊழியர்கள்..!! முன்கூட்டியே பிளான் பண்ணிக்கோங்க..!!

டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி, 2024 ஜனவரி 20ஆம் தேதி வரை அனைத்து அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் ஊழியர்கள் சுழற்சி முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்து வங்கிகளிலும் போதுமான பணியாளர் எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும். நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்யாமல், 3ஆம் நிறுவனங்கள் மூலமாக தற்காலிக பணியாளர்களை தேர்வு செய்யக் கூடாது. பணியாளர் நியமனம் தொடர்பான விதிகளை மீறக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி, அனைத்து தனியார் வங்கிகளும் டிசம்பர் 11ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. போராட்டம் வெவ்வேறு தேதிகளில் நடைபெற உள்ளது என்றாலும், அனைத்து வங்கிகளுமே ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஒட்டுமொத்தமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கும் போராட்டத்தில் முதல் கட்டமாக எஸ்பிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் சிந்து வங்கி போன்றவை பங்கேற்கின்றன. அதேபோல 5, 6, 7, 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வெவ்வேறு வங்கிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

ஜனவரி 2ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய இடங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. பொங்கல் பண்டிகைக் காலத்திலேயே வங்கிகளுக்கு நீண்ட விடுமுறை நாட்கள் வர இருக்கின்றன. அதையொட்டி ஜனவரி 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் அனைத்து வங்கிகளுமே வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன.

Chella

Next Post

’சொன்னா எங்க கேக்குறாங்க’..? பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவனின் 2 கால்களும் அகற்றம்..!!

Sat Nov 18 , 2023
தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம். ஆனால், பள்ளி-கல்லூரி செல்லும் நேரங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே இயக்கப்பட்டு வருவதாக மாணவர்களிடையே பொதுவான குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனால் கிடைக்கும் பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்வதை காணலாம். ஓட்டுனரும், நடத்துனரும் மேலே ஏறி வாங்க என எத்தனை முறை சொன்னாலும், சிலர் அலட்சியமாக படியில் பயணம் செய்து வருவார்கள். குறிப்பாக சென்னையில் படிக்கட்டில் […]

You May Like