fbpx

புயல் எச்சரிக்கை!… அரபிக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!… வானிலை மையம் அலர்ட்!

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஜூன் 7-ம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று முதல் ஜூன் 7ம் தேதி வரை தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு சூறாவளி சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவாகலாம் என்றும் குறிப்பாக, அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மும்பை மற்றும் கொங்கன் பகுதி உள்ளிட்ட மகாராஷ்டிராவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, அது புயலாக உருவானால், அதற்கு “பைபர்ஜோய் புயல்” என்று பெயர் வைக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்...!

Mon Jun 5 , 2023
பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மராத்தி மற்றும் ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகையான பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர், உடல்நலக்குறைவு மற்றும் வயது தொடர்பான சிக்கல்களால் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) காலமானார். மும்பையில் உள்ள சுஷ்ருஷா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை காலமானார். சுலோச்சனாவின் இறுதிச் சடங்கு இன்று மாலை 5:30 மணிக்கு தாதர் தகன மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Like