fbpx

மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்…! வானிலை மையம் எச்சரிக்கை…!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 23-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24, 25 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய வேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு – மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஹோட்டல்களில் தரமற்ற உணவு... ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்க...! அமைச்சர் மா.சு அதிரடி உத்தரவு...!

Wed Sep 20 , 2023
தமிழக முழுவதும் ஆய்வு செய்து தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுபிரமணியம் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் துறை ரீதியான விளக்கத்தை மாநில சுகாதாரத் துறை கோரியுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாமக்கல் […]

You May Like