fbpx

ஆண் வேடமிட்டு தூங்கிக் கொண்டிருந்த மாமியாரை அடித்தே கொன்ற மருமகள்..!! நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!!

நெல்லை மாவட்டம் வடுகன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமிக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ராமசாமியின் தாய் சீதா ராமலட்சுமிக்கும், மகாலட்சுமிக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், ஆத்திரத்தில் இருந்த மகாலட்சுமி, அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாமியார் சீதா ராமலட்சுமியை ஆண் வேடம் அணிந்து சென்று சரமாரியாக தாக்கிவிட்டு, அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார்.

இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் சீதா ராமலட்சுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டது மருமகள் மகாலட்சுமி என்பதை கண்டுபிடித்தனர். இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீதா ராமலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், மகாலட்சுமியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

செங்கல்பட்டு அருகே…..! மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்….!

Wed May 31 , 2023
செங்கல்பட்டு பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர். இத்தகைய நிலையில், நேற்று சுமார் 2 மணி அளவில் மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு மூத்த மருத்துவர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்கியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனை முதல்வரிடம் புகார் வழங்கினார். ஆனால் அந்த புகார் தொடர்பாக […]

You May Like