fbpx

தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் பிணமாக மிதந்த ஆண் நபரின் சடலம்..!

மகாராஷ்டிரா மாநில பகுதியில் உள்ள தானே நகரின் தண்ணீர் தொட்டியில் திங்கள்கிழமை அன்று மிகவும் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து பிற்பகல் 2.45 மணியளவில் வாக்லே எஸ்டேட் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலம் மிதப்பதாக அந்த பகுதியின் பேரிடர் மேலாண்மை பிரிவின் தலைவரான அவினாஷ் சாவந்த் என்பவர் தகவல் தெரிவித்தார். 

இதனையடுத்து உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆர்டிஎம்சி குழுவினர்களும் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், நாய் ஒன்று எதிர்பாராத விதமாக தொட்டியில் விழுந்துள்ளது. அப்போது சிறுவர்கள் குழு ஒன்று நாயை மீட்க சென்றபோது தண்ணீரின் மேற்பரப்பில் மிதந்த நபரின் உடலைக் கண்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்த மரணமானது எதனால் நிகழ்ந்திருக்கும் என்று பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

இபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பு..!! ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்துவோம்..!! சசிகலா அதிரடி

Tue Jan 17 , 2023
விரைவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க இருப்பதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில், எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதா இருந்தபோதே ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டவுடன் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் அதில் திருத்தம் இருந்தால், அவர்களே செய்து அனுப்புவார்கள். தொடர்ந்து […]
இபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பு..!! ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்துவோம்..!! சசிகலா அதிரடி

You May Like