fbpx

பதட்டமான சூழலில் உத்தரப் பிரதேசம்…! கேங்ஸ்டர் சுட்டுக்கொலை..மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்…!

உத்தரப் பிரதேசத்தில் காவல்துறை முன்னிலையில் கேங்ஸ்டர் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு இன்று மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடையை விதித்தது. சிறையில் அடைக்கப்பட்ட கேங்ஸ்டர் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் சனிக்கிழமை இரவு மருத்துவர் பரிசோதனைக்காக அரசு கல்லூரி மருத்துவக் கல்லூரிக்கு காவல்துறையினரால் அழைத்துச் சென்றனர்.

அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் கொடி அணிவகுப்பு நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் எம்பி அதிக் அகமது, சகோதரர் அஷ்ரப் ஆகியோரின் கொலையை விசாரிக்க 3 பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை முதல்வர் யோகி அமைத்துள்ளார்.

Vignesh

Next Post

எடப்பாடி தலைமையில் இன்று நடைபெறும் அதிமுக.,வின்‌ அவசர செயற்குழு கூட்டம்‌...!

Sun Apr 16 , 2023
அதிமுகவின்‌ அவசர செயற்குழு கூட்டம்‌ இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில்‌ கூட உள்ளது. அதிமுகவின்‌ அவசர செயற்குழு கூட்டம்‌ இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில்‌ கூடுகிறது. அதிமுகவின்‌ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர்‌ நடக்கவிருக்கும்‌ முதல்‌ செயற்குழு கூட்டம்‌ என்பதால்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல்‌ 7-ம்‌ தேதி செயற்குழு அறிவிக்கப்பட்டு பின்னர்‌ அது ரத்து செய்யப்பட்டது. மோடியின்‌ வருகையை காரணம்‌ காட்டி செயற்குழு […]

You May Like