படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் சோம்நாத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியின் போது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால், வேலையில்லாத அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்றும், வேலை கிடைக்காதவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
ஐந்தாண்டுகளில் நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு என்னை ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டாம். வேலையில்லாத ஒவ்வொருவருக்கும் வேலை கொடுப்போம் என்ற எனது எண்ணமும் தெளிவாக உள்ளது, நான் படித்தவன், அவர்களுக்கு எப்படி வேலை கொடுப்பது என்பது எனக்குத் தெரியும். அடுத்த 5 ஆண்டுகளில் டெல்லியில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்” என்றார்.