fbpx

அட்டகாசமான அறிவிப்பு… வேலை இல்லாத இளைஞர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும்…!

படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் சோம்நாத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியின் போது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால், வேலையில்லாத அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்றும், வேலை கிடைக்காதவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

ஐந்தாண்டுகளில் நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு என்னை ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டாம். வேலையில்லாத ஒவ்வொருவருக்கும் வேலை கொடுப்போம் என்ற எனது எண்ணமும் தெளிவாக உள்ளது, நான் படித்தவன், அவர்களுக்கு எப்படி வேலை கொடுப்பது என்பது எனக்குத் தெரியும். அடுத்த 5 ஆண்டுகளில் டெல்லியில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்” என்றார்.

Vignesh

Next Post

மக்களே இனி கவலை வேண்டாம்... QR code மூலம் 20% கட்டண தள்ளுபடியுடன் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்...!

Thu Aug 4 , 2022
மெட்ரோ ரயில் பயணிகள் கியூஆர் கேடு மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பெரும்பாலான பயணிகள் டிக்கெட் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர் ‌ இது போன்ற சிக்கல்களை தவிர்க்க இனி வரும் காலங்களில் மெட்ரோ ரயிலில் பயணிகள் வரிசையில் காத்திருக்காமல் கியூ ஆர் […]

You May Like