fbpx

தேமுதிக தனித்துப் போட்டி..!! ஓபிஎஸிடம் ஆதரவு கோர முடிவு..!! எடப்பாடிக்கு பயங்கர ஷாக்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும், அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்றது.

தேமுதிக தனித்துப் போட்டி..!! ஓபிஎஸிடம் ஆதரவு கோர முடிவு..!! எடப்பாடிக்கு பயங்கர ஷாக்..!!

இந்தக் கூட்டத்தில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் சுதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆனந்த் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும், ஓபிஎஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கோரவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Chella

Next Post

” தயவுசெய்து ஓபிஎஸ் - இபிஎஸ் போல வாழ்ந்து விடாதீர்கள்..” திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..

Mon Jan 23 , 2023
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சென்னை மாநகராட்சி 3-வது மண்டலம் கொசப்பேட்டை பகுதியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை திறந்து வைத்தார்.. பின்னர் முதல் கட்டமாக 9 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி “ நவீன வசதிகளுடன் இந்த திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.. தனியார் மண்டபமாக இருந்தால் லட்சக்கணக்கில் வாடகை வசூலித்திருப்பார்கள்.. ஆனால் ஏழை எளிய […]

You May Like