fbpx

பெண்கள் ஆவலுடன் காத்திருந்த ரூ.1000 உரிமைத் தொகை திட்டம்.. வெளியான புதிய தகவல்…

திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.. பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டாலும் இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று பெண்கள் ஆர்முடன் காத்திருக்கின்றனர்..இதனிடையே பெண்களுக்கு ரூ.1000 உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.. ஆனால் தேர்தல் வாக்குறுதியின் படி, மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுவது உறுதி என்று முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்தார்..

மேலிட உத்தரவுக்காக காத்திருக்க வேண்டாம்..! காவல்துறைக்கு அதிரடி உத்தரவிட்ட முதல்வர்..!

இதனிடையே 2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.. தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்..

இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்திற்கு தமிழகத்தில் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள 34.51 லட்சம் பேர் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது… மேலும் இதற்காக மத்திய, மாநில அரசு திட்டங்களை பெறும் பயனாளிகள், ஏழ்மையில் உள்ளவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.. அதன் பின் மற்ற பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு உதவித்தொக வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது..

Maha

Next Post

“ பக்ரீத் அன்று கால்நடைகளை பலியிடாதீர்கள்... மீறினால்..” கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை

Thu Jul 7 , 2022
கர்நாடக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு பி சவான், மாநிலம் முழுவதும் பசு வதை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதை நினைவூட்டியதோடு, பக்ரித் பண்டிகைக்காக கால்நடைகளை பலியிட வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்… தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார். கர்நாடகாவில் பசு வதை தடைச் சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது என்று அமைச்சர் வலியுறுத்தினார். பசுக்கள் மற்றும் மாட்டிறைச்சி சட்டவிரோதமாக வெளி மாநிலங்களுக்கு […]

You May Like