கோவை மாவட்டத்தில் 28 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவாமல் தடுக்கும் வகையில், மாநகராட்சியுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது 28 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரம் அடையாத நிலையில், கோவையில் மழை பெய்தாலும், வைரஸ் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பருவகால காய்ச்சலுடன் டெங்கு பாதிப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தண்ணீர் தேங்காமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.