fbpx

தமிழ்நாட்டில் தீவிரமடையும் டெங்கு..!! மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம்..!! பள்ளிகளுக்கு விடுமுறையா..?

தமிழ்நாட்டில் அடிக்கடி பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாகி வருகிறது. அரசு டெங்கு பாதிப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது தமிழ்நாட்டில் புதிதாக தினமும் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

டெங்கு பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வீடுகளை சுற்றி குப்பைகள் சேர்ந்து கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தண்ணீர் பிடித்து வைத்தால் அதை மூடி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீப நாட்களாகவே பள்ளி மாணவர்கள் பலரும் பாதிக்கப்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Chella

Next Post

ஓரின சேர்க்கைக்கு மறுத்த பள்ளி சிறுவன்; ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்..

Fri Oct 6 , 2023
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் 17 வயதான ஜீவா, விருத்தாசலம் அரசு மேல்நிலைப்பள்ளில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் கடந்த அக்டோபர் 3ம் தேதி தனது பள்ளிக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது ஆனந்த் என்ற நபர், நான் உன்னுடன் தனியாக பேசவேண்டும் என்று ஜீவாவை அழைத்துள்ளார். ஆனந்த், மின்சாரத் துறையில் தற்காலிக ஊழியராக வேலை செய்து […]

You May Like