தமிழ்நாட்டில் அடிக்கடி பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாகி வருகிறது. அரசு டெங்கு பாதிப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது தமிழ்நாட்டில் புதிதாக தினமும் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
டெங்கு பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வீடுகளை சுற்றி குப்பைகள் சேர்ந்து கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தண்ணீர் பிடித்து வைத்தால் அதை மூடி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீப நாட்களாகவே பள்ளி மாணவர்கள் பலரும் பாதிக்கப்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.