fbpx

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு..!! மண்டியிட்டு கதறி கதறி அழுத முன்னாள் துணை முதல்வர்..!! பரபரப்பு

ஆந்திர மாநிலம் கடந்த 2014ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு தெலங்கானா தனி மாநிலமாக உருவெடுத்த பிறகு இதுவரை 2 சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்துள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்று முதல்வராக இருப்பவர் கே.சந்திரசேகர ராவ். இந்நிலையில், தெலங்கானா சட்டமன்றத்திற்கு இந்தாண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

இம்முறை காஜ்வெல் மற்றும் கமாரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் கே.சி.ஆர். போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சரான கே.டி.ராமராவ், சிர்சில்லா தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டேஷன் கான்பூர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவும், முன்னாள் துணை முதல்வருமான தட்டிகொண்ட ராஜய்யாவுக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அவருக்கு பதிலாக ஸ்டேஷன் கான்பூர் தொகுதியில் மூத்த தலைவரான கடியம் ஸ்ரீஹரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், மனம் உடைந்து போன முன்னாள் துணை முதல்வர் ராஜய்யா, தனது தொகுதியில் உள்ள அம்பேத்கரின் சிலை முன்பு தரையில் மண்டியிட்டு கதறி அழுதார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காவிட்டாலும், கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

தெலங்கானா தனி மாநிலமான பிறகு நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே வெற்றி பெற்று எம்எல்ஏ-வான ராஜய்யாவுக்கு துணை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், சுகாதாரத்துறையில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதால், அவர் 2015ஆம் ஆண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் ஸ்டேஷன் கான்பூர் தொகுதியில் இருந்து 2-வது முறையாக எம்எல்ஏ ஆனார்.

ஆனால், இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு ஆளானதாகக் கூறி ராஜய்யாவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

வேலைக்கு சென்று வந்த சிறுமியை நோட்டமிட்ட கும்பல்..!! வாயை பொத்தி மாடிக்கு தூக்கிச் சென்று 8 பேர் பலாத்காரம்..!!

Wed Aug 23 , 2023
தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் உள்ள லால் பஜார் என்ற பகுதியில் 15 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர், அதே பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது பெற்றோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தனர். இதனால் இந்த சிறுமி மற்றும் அவரது தம்பி ஆகியோர் தனியாக இருந்த நிலையில், மீர்பேட்டை பகுதியிலுள்ள உறவினர் ஒருவர், இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். […]

You May Like