fbpx

முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தனியார் துறையுடன் ஒப்பந்தம்…!

பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத் துறையின் கீழ் உள்ள மறுவாழ்வு இயக்குநரகம் (டி.ஜி.ஆர்) மற்றும் மெஸர்ஸ் ஜென்பாக்ட் இந்தியா தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே டெல்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மறுவாழ்வு இயக்குநரகம் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், பாதுகாப்பு சேவைகளின் மதிப்பிற்குரிய முன்னாள் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க பெருநிறுவனங்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களை ஒரே தளத்தில் கொண்டு வர முயற்சிக்கிறது.

தொழில்முறை சேவைகளில் உலக அளவில் முன்னணி வகிக்கும் ஜென்பாக்ட், முன்னாள் படைவீரர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் . தொழில்துறை மற்றும் பெரு நிறுவனங்களுக்கு நமது முன்னாள் படைவீரர்களின் சிறப்பான பங்களிப்பு கிடைக்கும். நிறுவனங்களுக்கு திறமையான மனிதவளத்தை அளிக்க உதவுதல் மற்றும் நமது முன்னாள் படைவீரர்களுக்கு கண்ணியமான இரண்டாவது வேலைவாய்ப்பை வழங்குதல் ஆகிய நோக்கங்களை அடைய உதவும்.

Vignesh

Next Post

மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த இளம் கர்ப்பிணி பெண்….! விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி உண்மை….!

Fri Sep 1 , 2023
கன்னியாகுமரி அருகே, இளம் கர்ப்பிணிப் பெண்ணை சாதிய ரீதியாக துன்புறுத்தியதால், அவர் உயிரிழந்ததாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்(35), கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுபாலெட்சுமி (25) இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்த நிலையில் தான், சுபாலெட்சுமி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். […]

You May Like