fbpx

TASMAC அனைத்தும் மூட உத்தரவு…! மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…! ஆட்சியர் அறிவிப்பு…

சுதந்திர தினத்தை முன்ஙனிட் அனைத்து மதுபானக்கடைகள்‌ மூடப்படும்‌ என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள்‌ 2003 -12 விதியின்‌ படி, 15.08.2022 சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள்‌ மூடி விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின்‌ உத்தரவின்‌ படி, எதிர்வரும்‌ சுதந்திர தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லா தினமாக கடைப்பிடிக்கப்படுவதால்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள அரசு மது பானசில்லறை விற்பனைக்‌ கடைகள்‌ மற்றும்‌ மது கூடங்களுக்கான உரிமம்‌ பெற்றுள்ள அரசு மற்றும்‌ தனியார்‌ ஓட்டல்கள்‌ (FL-3,FL3A, FL-4A) அனைத்தும்‌ 15.08.2022 சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்றைய தினங்களில்‌ மூடப்படும்‌. இந்தஉத்தரவினை மீறி மது விற்பனையில்‌ யாரேனும்‌ ஈடுபட்டால்‌ அவர்கள்‌ மீது கடும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பெற்றோர்களே கவனம்... இன்று இந்த 6 மாவட்டத்தில் மட்டும் கனமழை...! வானிலை மையம் முக்கிய தகவல்

Fri Aug 12 , 2022
தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை அழைக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை வட தமிழ்நாடு மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]

You May Like