மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ம.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இதில் பேராசிரியராக பணியாற்றுபவர் சதீஷ் . அதே கல்லூரியில் பயிலும் 2ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. தருமபுரிக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் …. ’’ புகாரில் மாணவி அளித்த புகாரும் , விசாரணை குழுவினர் கூறியதும் ஒன்றாக உள்ளது. இது தொடர்பாக தற்போது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு முன்னாள் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டேன். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். பின்னர் தொடர்ந்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர் பணி என்பது மக்களை காக்கும் மகத்தான பணி . யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும். ’’ என்றார்.