fbpx

மாணவிக்கு பாலியல் தொல்லை … பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடிவடிக்கை….

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ம.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இதில் பேராசிரியராக பணியாற்றுபவர் சதீஷ் . அதே கல்லூரியில்  பயிலும் 2ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. தருமபுரிக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் …. ’’ புகாரில் மாணவி அளித்த புகாரும் , விசாரணை குழுவினர் கூறியதும் ஒன்றாக உள்ளது. இது தொடர்பாக தற்போது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு முன்னாள் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டேன். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். பின்னர் தொடர்ந்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர் பணி என்பது மக்களை காக்கும் மகத்தான பணி . யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும். ’’ என்றார்.

Next Post

அதிர்ச்சி..!! சக மாணவர்களின் ’ராகிங்’ கொடுமையால் விடுதி மாணவன் தற்கொலை..!

Tue Sep 13 , 2022
அரியானாவில் ராகிங் கொடுமையால் பல்கலைக்கழக மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் சன்ஸ்கர் சதுர்வேதி (19). விடுதியில் தங்கி வணிக நிர்வாகவியல் படிப்பு படித்து மாணவன் சன்ஸ்கர் சதுர்வேதி மர்மான முறையில் விடுதியில் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகம் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தது. பின்னர் அங்கு விரைந்த அவர்கள், மாணவனின் சடலத்தை […]
ராகிங் கொடுமை..!! 2-வது மாடியிலிருந்து குதித்த பல்கலைக்கழக மாணவன்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like