fbpx

நண்பனை வெட்டிக்கொன்று உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட நாட்டு வைத்தியர்! ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்கவில்லை!…

கும்பகோணம் அருகே ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த நண்பனை வெட்டிக்கொன்று உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட நாட்டு வைத்தியரின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மணல்மேடு மகாராஜபுரத்தைச் சேர்ந்த அசோக்ராஜன் என்ற 27 வயது இளைஞர் சென்னையில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு சென்ற அசோக் ராஜன் கடந்த 13ஆம் தேதி சிதம்பரத்துக்குச் சென்று நண்பரைப் பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்குச் செல்வதாகத் தன்னுடைய பாட்டி பத்மினியிடம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பினார். ஆனால் அவர் சென்னைக்கு செல்லவில்லை. அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கில் கும்பகோணம் சோழப்புரத்தை சேர்ந்த நாட்டு வைத்தியரான கேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது கேசவமூர்த்தி, முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, கேசவமூர்த்தி கூறிய பதில்கள் நடுங்க வைத்தது.

ஆண்மைக் குறைவுக்காக அசோக் தன்னிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த போது அவர் மறுத்ததாகவும் தெரிவித்தார். மேலும் தனது ஆசைக்கு இணங்க மறுத்த அசோக் ராஜனுக்கு ஆண்மை வீரியத்துக்கான மருந்தை அதிகமாக கொடுத்து அவரை தனது ஆசைக்கு பயன்படுத்தியுள்ளார் கேசவமூர்த்தி. இதனால் நிலைகுலைந்த அசோக்கின் பிறப்பு உறுப்பை வெட்டி கொலை செய்துள்ளார் கேசவராஜ்.

பின்னர் அவருடைய உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டை சுற்றி புதைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், பீன்னர் வீட்டை சுற்றி புதைக்கப்பட்ட இடங்களில் இருந்து ஏராளமான எலும்புக்கூடுகளை கைப்பற்றினர். இதையடுத்து அசோக்கின் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி அவரது இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டதாகவும் மேலும் தான் வளர்க்கும் நாய்க்கும் அவற்றை பரிமாறியதாக தெரிவித்தார்.

Kokila

Next Post

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு…! மொத்தம் 1832 காலியிடங்கள்… உடனே விண்ணப்பிக்கவும்…!

Sat Nov 25 , 2023
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் கொங்கன் இரயில்வேயில் Apprentices பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 1842 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு IIT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.9,000 மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் டிசம்பர் 9-ம் தேதி மாலைக்குள் […]

You May Like