fbpx

உஷார்..!! சிறுமியின் உயிரை பறித்த 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ்..!! உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எடுத்த ஆக்‌ஷன்..!!

திருவண்ணாமலையில் 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் அருந்திய நிலையில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குளிர்பானம் தயாரிக்கப்படும் ஆலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கனிகிலுப்பையை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் – ஜோதிலெட்சுமி தம்பதி. இவர்களுடைய 6 வயது மகள் காவியா அருகில் உள்ள கடையில் 10 ரூபாய்க்கு Dailee நிறுவனத்தின் கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்துள்ளார். இந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்திலேயே குழந்தை வாயில் நுரைத்தள்ளி மயங்கியுள்ளார்.  குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை, தனது குழந்தை மரணத்திற்கு Dailee குளிர்பானமே காரணம் என புகார் அளித்தார். சிறுமி குடித்த Dailee குளிர்பான ஆலையின் கிளை ராசிபுரத்தில் செயல்பட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஏ.கே.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் பழரச பானம் தயாரிக்கும் ஆலையில் ஆய்வு செய்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அங்கு தயாரிக்கப்படும் ஆப்பிள், மாம்பழம் உள்ளிட்ட பழரச குளிர்பானங்களின் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

Read more ; அவகாடோவை வைத்து கோடிகளில் சம்பாதிக்கும் BBA பட்டதாரி..!! சுவாரஸ்ய பின்னணி இதோ..!!

English Summary

Died due to ill health after drinking Rs 10 Coolrings in Tiruvannamalai.

Next Post

பிரபல நடிகை செய்த காரியத்தால் வீட்டை விட்டு வெளியேறிய தந்தை..!! நளினி வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..?

Tue Aug 13 , 2024
Not all heroines in Tamil cinema can stay in the cinema for long.

You May Like