fbpx

வந்தது அறிவிப்பு…! நுழைவு தேர்வு கிடையாது… நேரடி சேர்க்கை…! ஜூலை 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னணி நிறுவனமான மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம், பிளாஸ்டிக் அச்சு தொழில்நுட்ப பட்டய படிப்பு மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கான நேரடி சேர்க்கையை அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர், நுழைவு தேர்வு ஏதும் இல்லாமல், நேரடி சேர்க்கை மூலம் இரண்டு ஆண்டு பட்டய படிப்புகளில் சேரும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதேபோல அறிவியல் துறையில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் இரண்டு ஆண்டு கால முதுநிலை பட்டயத்தில் பிளாஸ்டிக் செயல்முறை மற்றும் சோதனை பயிற்சி மேற்கொள்ள நேரடி சேர்க்கையில் பங்கு பெற்று அனுமதி பெறலாம். நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி வரும் ஜூலை 31, 2023 ஆகும். பயிற்சியை நிறைவு செய்பவர்கள் ரிலையன்ஸ், டி.வி.எஸ் குழுமத்தின் தொழிற்சாலைகள், சாம்சங், ஹூண்டாய், போன்ற முன்னணி நிறுவனங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை சிப்பெட் நிறுவனம் உருவாக்கும்.

இது தவிர, 12-ஆம் வகுப்பு பயின்று உயர்கல்வியைத் தொடர முடியாதவர்கள், மூன்றாண்டு கால பட்டய படிப்பில் நேரடி சேர்க்கை மூலம் இரண்டாம் ஆண்டில் அனுமதி பெற்று வேலைவாய்ப்பையும் பெற முடியும். கூடுதல் விவரங்களுக்கு 9360098600/ 9600254350 என்ற அலைபேசி எண்ணையோ அல்லது chennai@cipet.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம்.

Vignesh

Next Post

வங்கக் கடலில் உருவாகும் புதிய புயல்..!! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!! மக்களே கவனம்..!!

Tue May 9 , 2023
வங்கக்கடலில் உருவாக உள்ள மோக்கா புயலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் […]

You May Like