fbpx

ட்ராலி பேக்கில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள்……! பிரபல ஹோட்டல் உரிமையாளர் படுகொலை கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்…..!

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் கொலை செய்யப்பட்டு அவருடைய உடல் பாகங்கள் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி காட் சாலையில் ட்ராலி பேக்கில் கிடந்தனர் சித்திக் என்று அடையாளம் காணப்பட்ட உயிரிழந்த நபர், சென்ற வியாழக்கிழமை முதல் காணாமல் போய்விட்டார் என அவருடைய மகன் புகார் வழங்கியிருந்தார்.

இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மலப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் தாஸ் இந்த கொலை கடந்த 18ஆம் தேதி மற்றும் 19ஆம் தேதிக்கு இடையில் நடைபெற்றுள்ளது மேலும் இந்த வழக்கு குறித்து 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் போலீஸ்காவலில் வைக்கப்பட்ட நபர்களில் ஒருவர் உயிரிழந்தவரின் ஹோட்டலில் பணியாற்றியவர் என்றும், மற்றொரு சந்தேக அந்த ஊழியரின் நண்பர் எனவும், அடையாளம் காணப்பட்டுள்ளார் குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டதாகவும் ரயில்வே பாதுகாப்பு படையினரின் உதவியுடன் சென்னையிலிருந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நடுவே உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் நடத்தப்படுகிறது எனவும் கொடைக்கான காரணம் இதுவரையில் தெரிய வரவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து கடைக்காரர்…..! ஜார்கண்டில் பகீர் சம்பவம்….!

Sat May 27 , 2023
ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஜியிலிருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற பகுதி தான் சாஸ். இது பொகாரோ மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி என்று கூறப்படுகிறது. இங்கே அசோக்(37) என்ற நபர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு அருகே பெண் ஒருவரும் கடை நடத்தி வருகிறார். இருவரும் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக அருகருகே கடை நடத்தி வருவதால் நல்ல பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த பெண்ணுக்கு 6 வயதில் […]

You May Like