fbpx

சசிகலாவுடன் மீண்டும் இணைகிறார் திவாகரன்..! தஞ்சையில் அதிமுக-அ.தி.க. இணைப்பு நிகழ்ச்சி..!

தனிக்கட்சி ஆரம்பித்த சசிகலா சகோதரர் திவாகரன் மீண்டும் தன் சகோதரியுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் பொருட்டு, அவரது அணித் தரப்பில் நாளை பொதுக்குழு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஓபிஎஸ் அணி அவர்களை எதிர்த்து தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சசிகலா அரசியலில் இருக்கக் கூடாது என்பது தினகரனின் எண்ணம்; அது  நிறைவேறிவிட்டது' - திவாகரன் காட்டம்-divakaran about sasikala quiting  politics

இதற்கு நடுவே, சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொண்டர்களை சந்தித்து வருகிறார். ‘சிலரின் சுயநலத்துக்காக கட்சியை கூறுபோடும் நிலை ஏற்பட்டுள்ளது. நான்தான் அதிமுக பொதுச்செயலாளர். விரைவில் தலைமை கழகத்தை கைப்பற்றுவேன்,’ என்று சசிகலா கூறியிருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிறிது காலம் சசிகலா, அவர் சகோதரர் திவாகரன், டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து செயல்பட்டாலும் பிறகு தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

vk sasikala family, அதிமுகவில் இணைகிறாரா திவாகரன்? பின்னணியில் சசிகலாவா? -  sasikala brother divakaran trying to join the aiadmk sources said - Samayam  Tamil

திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில், அந்தக் கட்சியை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சசிகலா அதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சின்னம்மா தலைமையில் அதிமுகவோடு, அதிக-வை இணைக்கும் விழா தஞ்சையில் வரும் 12ஆம் தேதி காலை 11 மணியளவில் ஓர் திருமண மண்டபத்தில் நடைபெறும்”. என கூறப்பட்டுள்ளது.

Chella

Next Post

கர்ப்பிணி அமர்ந்திருந்த இருக்கையை எட்டி உதைத்த மருத்துவர்..? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Sun Jul 10 , 2022
திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி அமர்ந்திருந்த இருக்கையை மருத்துவர் எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ரயில்வே பீடர் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர்யா. கர்ப்பிணியான இவர், தனக்கு காலில் அடிபட்டதால் சிகிச்சைப் பெறுவதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் திருப்புவனம் அரசு மருத்துவனைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த மருத்துவர் பாலகிருஷ்ணன், சவுந்தர்யாவை பரிசோதித்து விட்டு அவசர நோயாளி பிரிவுக்கு […]

You May Like