fbpx

திமுக வேட்பாளர்கள்..!! விண்ணப்ப தேதியை அறிவித்தது தலைமை கழகம்..!!

திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதிக்குள் அளிக்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் பெறுவதற்கான தேதியை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்ப படிவங்களை பிப்ரவரி 19ஆம் தேதி முதல், சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.50,000 எனவும், அதற்காக ரூ.2,000 செலுத்தி விண்ணப்ப படிவத்தை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக் கழகத்தில் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி மாலை 6 மணிக்குள் செலுத்த வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Chella

Next Post

#BREAKING | நாளை குற்றச்சாட்டு பதிவு..!! செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த நீதிபதி அல்லி உத்தரவு..!!

Thu Feb 15 , 2024
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை (பிப்ரவரி 16) நேரில் ஆஜராக வேண்டுமென நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலக்கத்துறை தொடர்ந்த வழக்கினை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அல்லி, நாளைய தினம் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறை தொடங்கும் என்றும் செந்தில் பாலாஜி […]

You May Like