fbpx

’ஆன்லைன் கேம் நடத்தும் மார்ட்டினிடம் திமுக ரூ.600 கோடி பெற்றது’..!! அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பகீர்..!!

திமுக ஆன்லைன் சூதாட்டத்திற்கு முழு முதலாக ஒத்துழைப்பதாகவும், மார்ட்டின் வகையறா தான் திமுகவில் அங்கம் வகிக்கிறார்கள் என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் பகுதியில் அதிமுக சார்பாக இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதனை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கொடைக்கானலில் காட்டு தீ பற்றி எரிகிறது. மறுபுறம் ஆவியூரில் வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஏற்காடு விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போதை வஸ்துகளால் ஆங்காங்கே கலவரம் நடைபெறுகிறது. இந்த அளவுக்கு அரசு மோசமான நிலையில் உள்ளது.

முதல்வர் சுற்றுலா சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். முதல்வர் உடனடியாக தலையிட்டு இதனை தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது எனக் கூறினார். ஆளுங்கட்சியினர் மக்களுக்கு உதவுவது குறித்த கேள்விக்கு, ஆளுங்கட்சிக்கு நன்கொடை அளிக்கும் எண்ணம் கிடையாது. அரசு கையில் இருக்கும் காரணத்தால், குடிநீர் பஞ்சத்தை தீர்ப்பதற்கு முயற்சிக்கலாம். எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்றார்.

ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாக ஒழிப்பதற்கான முயற்சி குறித்த கேள்விக்கு, எந்தெந்த தவறுகளுக்கெல்லாம் உடமையாக இருக்க முடியுமா..? அதுக்கெல்லாம் திமுக உடந்தையாக இருக்கிறது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம் நிறைவேற்ற முற்பட்டபோது, அதற்கும் திமுக ஆதரிக்கவில்லை, இப்போதும் ஆதரிக்கவில்லை. அனைத்து கட்சிகளும் தேர்தலின் போது வங்கி பத்திரங்கள் மூலம் நிதி வாங்கினர். அதிமுகவுக்கு 6 கோடி நிதி சிஎஸ்கே அணி வழங்கியது. ஆன்லைன் கேம் நடத்தும் மார்ட்டினிடம் திமுக 600 கோடி பெற்றது. திமுக ஆன்லைன் சூதாட்டத்திற்கு முழு முதலாக ஒத்துழைக்கிறது. மார்டின் வகையறா தான் திமுகவில் அங்கம் வகிக்கின்றனர். மார்ட்டினின் எல்லா தவறுகளுக்கும் காரணம் மக்கள் புரிந்து கொண்டுதான் இந்த தேர்தலில் வாக்களித்திருக்கின்றனர்” என்றார்.

Read More : உங்கள் வீட்டில் மணி பிளான்ட் செடி வைக்கப்போறீங்களா..? இவ்வளவு நன்மைகளா..? எப்படி பராமரிப்பது..?

Chella

Next Post

'தைராய்டு பிரச்னைக்கு தீர்வு அளிக்கும் கடல் பாசி' இதுல இவ்வளவு நன்மைகளா?

Fri May 3 , 2024
கடல் பாசி, மற்ற உணவுகளை கெட்டியாக்கப் பயன்படும் கேரஜீனன் என்ற பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏராளமான ஆரோக்கிய சத்துக்கள் இடம்பிடித்திருந்தாலும், சரியான முறையிலும், சரியான அளவிலும் உட்கொள்ளப்படாவிட்டால் கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. கடல் பாசி,பயன்கள் மற்றும் அதை உண்ணும் முறை பற்றி தெரிந்து கொள்ளலாம். வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கடலோர பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. உண்ணக்கூடிய உணவாக இருந்து வரும் கடல் பாசி மஞ்சள், […]

You May Like