fbpx

டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்தும் திமுக..? அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு பதில்..!!

டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”திமுக ஆட்சி அமைத்த இரண்டு ஆண்டு காலத்தில் இதுவரை 306 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் செயல்படுவது போல் சில பத்திரிக்கைகள் செய்திகளில் வெளியிடுவது வேதனை அளிக்கிறது. காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மால் ஷாப்பில்தான் இந்த கடை செயல்படுகிறது. இந்த கடைக்குள்தான் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் திறந்த வெளியில் தானியங்கி இயந்திரம் செயல்படுகிறதா என்பதை தெரிந்து சரியான தகவல்களுடன் செய்தி வெளியிட வேண்டும்.

21 வயதுக்கு குறைவாக யாராவது இதில் மது வாங்க முடிகிற அளவுக்கு உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். எந்த மாநிலத்திலும் இது போன்ற தானியங்கி இயந்திரம் இல்லையா..? 29% நாடாளுமன்ற வருகை பதிவு கொண்ட, நாடாளுமன்றத்திற்கு போகாதவர்கள் இது குறித்து செய்தி வெளியிடுகிறார்கள். இந்த கடை எங்கு உள்ளது, அது எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து செய்தி வெளியிடுங்கள். 2019 இல் தான் இந்த தானியங்கி இயந்திரம் திறக்கப்பட்டது. 2013, 2014, 2018 என 4 ஆண்டுகளில் 4 கடைகளில் அதிமுக ஆட்சியில் தான் திறக்கப்பட்டது. டாஸ்மாக் நிறுவனம் இந்த தானியங்கி இயந்திரத்திற்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை.

அன்புமணி உட்பட யாராவது நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதும் பூரண மது விலக்கு கொள்கையை கொண்டு வர வேண்டியதுதானே அதற்கு தைரியமில்லை இங்கு வந்து அரசியல் செய்கிறார்கள். கடந்த அரசாங்கத்தில் தொடங்கப்பட்ட கடைகளை அறிவிக்கப்படாமல், 90 கடைகளுக்கு மேல் மூடப்பட்டுள்ளது. சட்டசபையில் 500 கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் உண்மைக்கு மாறாக செய்திகள் பரப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் மூலம் கிடைக்கும் இந்த வருமானத்தை கொண்டு அரசு நடத்த வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு இல்லை. கொரோனா காலத்தில் பெங்களூருவில் மது கடைகள் ஒரு நாள் கூட மூடவில்லை” என தெரிவித்தார்.

Chella

Next Post

வங்கக் கடலில் விடுக்கப்பட்டிருக்கின்ற புயல் எச்சரிக்கை….! வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை வானிலை ஆய்வு மையம்…..!

Wed May 3 , 2023
வங்க கடல் பகுதியில் புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகின்ற நிலையில், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது பொதுமக்களை சற்று மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில்தான் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தெற்கு வங்கக்கடல் […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

You May Like