fbpx

கவனம்…! 10 மற்றும் 20 ரூபாய் நாணயம் வைத்திருக்கும் நபரா நீங்க..‌.? அவசியம் இதை படியுங்கள்…! அரசு முக்கிய உத்தரவு…

பேருந்து பயணத்தின் போது பயணிகளிம் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்க கூடாது என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை பொது மக்கள் பயணச்சீட்டு வாங்க கொடுக்கும்போது, அரசுப்பேருந்து நடத்துநர்கள் வாங்க மறுப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை பேருந்தில் பயணிகள் கொடுத்தால், நடத்துநர்கள் அதை மறுக்காமல் பெற்றுக்கொண்டு பயணச்சீட்டை வழங்க வேண்டும்.

மேலும் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டவை. எனவே, அவை புழக்கத்தில் இருப்பதாலும் பேருந்து பயணிகளிடம் பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கக்கூடாது. இதனால் நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துநர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Vignesh

Next Post

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு...! மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லை...!

Thu Nov 24 , 2022
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,’மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை ஒட்டி, நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று முன்தினம் மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. இந்நிலையில், நேற்று காலை தெற்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டியுள்ள […]

You May Like