fbpx

ரயில்வே காப்பீடு பற்றி உங்களுக்கு தெரியுமா..? வெறும் 35 பைசா செலுத்தினால் ரூ.10 லட்சம் கிடைக்கும்..!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ஆனால், ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் எடுக்கும் பயணக் காப்பீடு எடுத்திருந்தால் அதன் மூலமும் பலன் இழப்பீடு பெறலாம்.

ரயில்வே பயணக் காப்பீட்டு எடுக்க பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வெறும் 35 பைசா செலுத்தினால் போதும். இந்த வசதியின் மூலம், ஐஆர்சிடிசி (IRCTC) ரயிலில் பயணிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. இந்த காப்பீட்டின் கீழ், பயணிகள் தங்கள் ரயில் பயணத்தின்போது மதிப்புமிக்க பொருட்களை இழந்தால், அதற்கு இழப்பீடு பெற முடியும். மேலும், விபத்து ஏற்பட்டால், சிகிச்சைக்கான செலவுகளை ரயில்வே நிர்வாகம் ஏற்கும். இறப்பு ஏற்பட்டால், காப்பீட்டாளரின் நாமினிக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும்.

ஒரு பயணி ரயில் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தரமாக ஊனமுற்றாலோ, ரூ.10 லட்சம் வரை காப்பீடு தொகை வழங்கப்படும். பகுதி அளவு ஊனம் ஏற்பட்டால், அவருக்கு இழப்பீடாக ரூ.7.5 லட்சம் வழங்கப்படும். பலத்த காயம் ஏற்பட்டால் ரூ.2 லட்சமும், சிறிய காயம் ஏற்பட்டால், ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். ரயில்வே இணையதளம் மற்றும் ஐஆர்சிடிசி மொபைல் அப்ளிகேஷன் மூலம் இந்தக் காப்பீட்டைப் எடுப்பது எளிது. ஆனால், இந்த இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயம் அல்ல. பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, டிராவல் இன்சூரன்ஸ் வேண்டுமா என்று கேட்கப்படும் இடத்தில் ஆம் என்று தெரிவித்தால் போதும். இதன் மூலம் ரயில் டிக்கெட் கட்டணத்துடன் 35 பைசா மட்டும் பயண காப்பீட்டுத் தொகையாக வசூலிக்கப்படும்.

இந்திய ரயில்வே பயணிகள் ரயில் விபத்தில் சிக்கிய 4 மாதங்களுக்குள் காப்பீடு கோரலாம். பயணிகள் காப்பீட்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் சென்று காப்பீட்டுக்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கும்போது பயணிகள் நாமினியின் பெயரை நிரப்ப வேண்டும். அவ்வாறான நிலையில், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதைக் கோருவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.

Chella

Next Post

இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? வானிலை மையம் எச்சரிக்கை..!!

Sun Jun 4 , 2023
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை […]

You May Like