fbpx

ஆண் குழந்தைகளுக்கான இந்த சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா..? 8.5% வட்டி கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

வங்கிக் கணக்குகளை காட்டிலும், தபால் அலுவலக திட்டங்களில் கூடுதல் லாபம் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அஞ்சலகத் திட்டத்தின் கீழ் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே எதிர்கால தேவைக்காக முதலீடு செய்ய விரும்புகின்றனர்.

அந்த வகையில், தபால் அலுவலகத்தில் ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 10 வயது பூர்த்தி அடைந்த ஆண் குழந்தையின் பெயரிலேயே பெற்றோர்கள் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் இணையலாம்.ஆனால், 10 வயதுக்கு முன்பாகவே கணக்கு துவங்க விரும்பினால், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் கணக்கு துவங்கி 10 வயது நிறைவடைந்ததும் குழந்தையின் பெயரிலேயே மாற்றிக் கொள்ளலாம்.

பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் 8.5% வட்டி வழங்கப்படுவதால், ஒவ்வொரு மாதமும் குறைந்தது ரூ. 500 முதலீடு செய்தாலே அதிக லாபம் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரைக்கும் முதலீடு செய்து கொள்ள இயலும். மேலும், கணக்கு துவங்கப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து முதலீடு செய்த தொகையும் வழங்கப்படும்.

Chella

Next Post

இன்னும் சில மணி நேரங்களில்..!! இந்த 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Mon Oct 23 , 2023
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

You May Like