fbpx

உங்கள் குழந்தைகளை AC-இல் தூங்க வைக்கிறீங்களா..? பெற்றோர்களே இதையெல்லாம் மறந்துறாதீங்க..!!

குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப காற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் தற்போது ஏசியை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றன. இந்த ஏசியை குழந்தைகளுக்கு பயன்படுத்துவதில் பெற்றோர்களுக்கு பல சந்தேகம் தோன்றும். குழந்தைகளுக்கு எப்போது இருந்து ஏசி பயன்படுத்தலாம் என்ற கேள்வி இருக்கும். அதைப்பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். குழந்தை பிறந்த முதல் மாதத்தில் இருந்து ஏசிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது சில வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

AC பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் :

* ஏசி காற்று நேரடியாக குழந்தையின் மேல் படும்படி படுக்க வைக்கக் கூடாது. ஏசியின் டெம்பரேச்சர் 24 – 28 டிகிரி வரை வைத்துக் கொள்ள வேண்டும். 24 டிகிரிக்கு கீழ் வைத்தால் ஹைபோ தெரபி போன்ற பல பிரச்சனைகள் வர இருக்கிறது.

* ஏசி அறையை விட்டு குழந்தைகளை உடனடியாக வெளியே எடுத்துச் செல்லக்கூடாது. ஏசியை அணைத்து ரூம் டெம்பரேச்சருக்கு வந்த பிறகு தான் குழந்தையை எடுத்துச் செல்ல வேண்டும்.

* கை, கால், தலை போன்ற பகுதிகளை நன்றாக மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் அதிக குளிர்ச்சி ஏற்பட்டால் சளி பிடிக்க நேரிடும். குறிப்பாக, வயிறு மற்றும் நெஞ்சு பகுதி வெதுவெதுப்பாகவே இருக்க வேண்டும்.

* வாரம் ஒரு முறை ஏசியின் பில்டரை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், * அதில் உள்ள தூசிகளின் மூலமும், பாக்டீரியாக்களின் மூலமும் சளி பிடிக்க வாய்ப்புள்ளது.

* ஏசி காற்றில் தொடர்ச்சியாக இருக்கும் போது தோல் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் அல்லது மாய்சரைஸர் [moisturizer] பயன்படுத்த வேண்டும்.

* ஒருவேளை உங்கள் குழந்தைகளுக்கு ஏர் கூலர் பயன்படுத்துகிறீர்கள் என்றாலும் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

* ஏர் கூலர் பயன்படுத்தும் போது ஜன்னல் பக்கம் அல்லது கதவு ஓரத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

Read More : கொலுசு, மெட்டி, ஒட்டியாணம் அணிவதால் பெண்களுக்கு இவ்வளவு நன்மைகளா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Chella

Next Post

Bird Flu: ஜார்கண்ட்டில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் 4,000 பறவைகள் அழிப்பு..! தீவிரமடையும் பாதிப்பு..! அரசு எச்சரிக்கை..!

Thu Apr 25 , 2024
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அரசு நடத்தும் கோழிப் பண்ணையில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் எனப்படும் எனப்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியதை அடுத்து 4,000 பறவைகள் கொல்லப்பட்டன. Bird Flu: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அரசு நடத்தும் கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஞ்சியில் உள்ள ஹோட்வாரில் உள்ள கோழிப்பண்ணையில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் கோழிகள் உட்பட சுமார் 4000 […]

You May Like