பிரபல தேடுதள நிறுவனமான கூகுள் க்ரோமில் பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அதனை புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், கணினி மற்றும் கணினியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், பாதிப்புகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக மத்திய அரசு கணினி அவசர நிலை உதவி குழுவை தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த குழு கூகுள் க்ரோமில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை கண்டறிந்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய கனிணி அவசரநிலை உதவி குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகின் மிகப்பெரிய தொலைதொடர்பு தேடுதள நிறுவனமாக விளங்கி வரும் கூகுள் க்ரோமில் பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த குறைபாட்டின் மூலம் கோட் இயக்க சேவையை கட்டுப்படுத்த முடிகிறது.
கூகுள் க்ரோமில் விண்டோஸ் ஓ எஸ் 118.0.5993.70 மற்றும் 118.0.5993.71 ஆகிய முந்தைய பதிப்புகள் மற்றும் ஐமேக், வினக்ஸ் இயக்கத்தோடு தொடர்புடைய க்ரோ 118.0.5993.70 ஆகிய தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, கூகுள் க்ரோமில் புதிய அப்டேட்டுகளை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். மேலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதிப்புகளை தவிர்த்து மற்ற பதிப்புகளை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.