வெயில் காலத்தில் நாம் வெளியே சென்று வந்தாலே கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் நிறம் கருமையாகிவிடும். இந்த கருமையை போக்கு இந்த குறிப்புகளை கடைபிடியுங்கள்.
வெயில் காலத்தில் உடல் சூட்டை குறைக்க எவ்வளவு ஆரோக்கியமான பானங்கள் மற்றும் உணவு பொருட்களை எடுத்துக்கொள்கிறோமோ அதே அளவு சரும பராமரிப்பிலும் தனி கவனம் செலுத்தவேண்டும். ஏனென்றால் வெயிலில் சென்றுவந்தால் வறட்சி ஏற்பட்டு முகம், கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகள் கருமை நிறமாக மாறிவிடும். இதனை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் 1 டீஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் அரிசி தூள் இந்த பேக் செய்வதற்கு தேவை. இந்த பொருட்கள் அனைத்தையும் கலந்து கைகளில் இந்த பேக்கை தடவவும். இதனைக் கொண்டு சிறிது நேரம் கைகளை மசாஜ் செய்யவும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும். இதிலுள்ள எலுமிச்சை ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளது அதே நேரத்தில் அரிசி சருமத்தில் அழுக்குகளை வெளியேற்றுகிறது. இதனால் கைகள் பளிச்சென்று இருக்கும்.காபி ஸ்க்ரப் செய்ய காபி, அரை தேக்கரண்டி தேன் மற்றும் அரை தேக்கரண்டி பால் தே வைப்படும். இந்த பொருட்கள் அனைத்தையும் கலந்து ஒரு ஸ்க்ரப் தயார் செய்யுங்கள். இப்போது இந்த ஸ்க்ரப் மூலம் கைகளை சிறிது நேரம் மசாஜ் செய்து, அதன் பிறகு வெற்று நீரில் கைகளை கழுவவும்.
பப்பாளி கருமை நீங்க மிகவும் அதிக அளவில் உதவும். இதற்கு உங்களுக்கு 1 டீஸ்பூன் பப்பாளியின் சதைப்பகுதி மற்றும் 1 டீஸ்பூன் பப்பாளி விதைகள் தேவைப்படும். முதலில் பப்பாளியை துண்டுகளாக நறுக்கி அதன் சதைப்பகுதியை பிசைந்து கொள்ளவும். இப்போது அதனுடன் பப்பாளி விதைகளை சேர்த்து 5 நிமிடம் உங்கள் கைகளை மசாஜ் செய்யவும். இதைச் செய்த பிறகு, சருமத்தை சுத்தம் செய்யுங்கள். இது சருமத்தை மிகவும் ஆழமாக சுத்தம் செய்ய உதவும். இதற்கு அரை கப் தயிர் வேண்டும். அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் தேவை. இதை இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை கைகளில் தடவி 15 நிமிடம் அப்படியே வைக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.