fbpx

புது வகையான மோசடி…! குடியிருப்புக்காக இவர்களிடம் உங்க பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்…!

சென்னை நகரின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 1947 ஆம் ஆண்டு “சிட்டி இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்ட்” என்ற பெயரில் ஒரு சிறிய அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்னர் 1961 ஆம் ஆண்டில் “தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்” என ஒரு முழுமையான அமைப்பாக வளர்ந்தது. நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக மாநிலம் முழுவதும் வீட்டுத் துறையில் அதிகரித்து வரும் தேவை வேலை வாய்ப்புகளைத் தேடி நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதற்கு வழிவகுக்கிறது.

தற்பொழுது அனைவருக்கும்‌ வீடு என்னும் திட்டத்தின்‌ கீழ்‌, கிராமப்புற மற்றும் நகர்புரங்களில்‌ வறுமைகோட்டிற்கு கீழ்‌ உள்ள குடும்பத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி மற்றும்‌ தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்‌ மூலம்‌ சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள்‌ 428 கோடி ரூபாய் செலவில் 3,276 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதில் செம்மஞ்சேரி பகுதியில் 144 வீடுகளும், மீதமுள்ள வீடுகள், பெரும்பாக்கம் பகுதிகளில் கட்டப்படுகின்றன. கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்தது. இந்த வீடுகள், பகிங்ஹாம் கால்வாய் கரையோரம் மற்றும் இதர நீர்நிலையில் வசிக்கும் நண்பர்களுக்காக கட்டப்பட்டு வருகின்றன. இந்த குடியிருப்புகளை காட்டி, அதில் வீடு வாங்கி தருவதாக கூறி, புரோக்கர்கள் சிலர் வீடு இல்லாத ஏழை மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

வாரியம் வழங்குவது போல், போலி ஆணை தயாரித்து மோசடி நபர்களால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளர். அரசு சார்பில் எந்த பணமும் வசூலிக்கப்படுவதில்லை. எனவே பொதுமக்கள் பணம் கொடுத்து புரோக்கர்களிடம் ஏமாற வேண்டாம் என வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Vignesh

Next Post

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கு..! தமிழக தலைமை செயலாளருக்கு நீதிமன்றம் பாராட்டு..!

Tue Sep 5 , 2023
நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை விசாரித்தஉயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்த மனுவானது மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக தலைமை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் மற்றும் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுவில் அனைத்து துறை செயலாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு […]

You May Like