நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் தற்போது கேரளாவில் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக ஏப்ரல் முதல் வாரத்தில் விஜய் உள்ளிட்ட படக் குழுவினர் மாஸ்கோ செல்லவுள்ளனர். மாஸ்கோவில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து இரு வாரங்களுக்கு நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் பற்றி கேட்டு ரசிகர்கள் தொல்லை செய்வதாக தெரிகிறது. இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு, “அநியாயம் பண்ணாதீங்க நண்பா, நண்பீஸ். மிக விரைவில் அப்டேட் வரும். என்னை நம்புங்கள், நிச்சயம் அது சிறப்பான அப்டேட்டாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : கர்ப்பிணி பெண்களுக்கு செம குட் நியூஸ்..!! இனி ரூ.14,000 பெறுவது ரொம்ப ஈசி..!!