fbpx

குடையை மறந்துறாதீங்க..!! 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்க தயாராகும் மழை..!! எங்கெங்கு தெரியுமா..?

தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 05.05.2023 (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாளை மற்றும் மே 9ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசானது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை….! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!

Fri May 5 , 2023
தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த நிலையில் தமிழகத்தில் இன்று மாலை 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில், பெரம்பலூர், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், […]

You May Like