fbpx

மறந்தும் கூட இந்த பொருள்களை தலையணைக்கு அருகில் வைத்து விடாதீர்கள்..! விளைவு பயங்கரம்!

பொதுவாக பலர் இரவு நேரங்களில், கையில் கிடைப்பதை எல்லாம் தலையணைக்கு அடியில் அல்லது பக்கத்தில் வைத்து தூங்குவது உண்டு. இதற்க்கு முக்கிய காரணம், எழுந்து போய் பொருள்களை வைப்பதற்கு சோம்பேறித் தனம். ஆனால் நாம் செய்யும் இந்த தவறு நிதி சிக்கலுக்கு நம்மை ஆளாக்கிவிடும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?? ஆம், உண்மை தான். நீங்கள் வாஸ்து சாஸ்திரத்தை நம்பினால், இந்தப் பொருள்களை எல்லாம் மறந்தும் கூட தலையணைக்கு அடியில் வைத்து தூங்கிவிடாதீர்கள் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள். அந்தவகையில், வாஸ்து அடிப்படையில் எந்த பொருள்களை எல்லாம் தலையணைக்கு அருகில் அல்லது அடியில் வைக்க கூடாது என்பதைப் பற்றி பார்ப்போம்.

எலக்ட்ரானிக் பொருட்கள்: மொபைல் போன் அல்லது வாட்ச் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களை தலையணைக்கு அருகில் அல்லது அடியில் வைக்க கூடாது. இது அறிவியல் ரீதியாகவும் நமக்கு ஆபத்து அதே சமயம் இது பண இழப்புக்கு வழிவகுக்கும்.

கழுவப்படாத பாத்திரங்கள்: சில சமயங்களில், டீ அல்லது காபி டம்ப்ளரை நாம் படுக்கைக்கு அருகில், கழுவாமல் அப்படியே வைத்து விடுவோம். ஆனால் நாம் இப்படி கழுவப்படாத தலையணைக்கு அருகில் வைத்தால் அது வறுமைக்கு வழிவகுக்கும். அது மட்டும் இல்லாமல் தூங்கும் போது கெட்ட கனவுகளுக்கு வழிவகுக்கும்.

செய்தித்தாள்கள் அல்லது புத்தகங்கள்: சிலர் புத்தகங்களை வாசித்து விட்டு அப்படியே தலையணைக்கு அருகில் வைத்து விட்டு உறங்குவது உண்டு. ஆனால் இப்படி செய்தித்தாள்கள் அல்லது புத்தகங்கள் தொடர்பான எதை தலையணையின் கீழ் வைத்து உறங்கினாலும் அது வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலின் விளைவை அதிகரிக்கிறது இதனால் அவர்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

தங்கம்: பலர் தங்க நகைகளை தலையணையின் கீழ், தூங்குவதற்கு முன் கலட்டி வைப்பது உண்டு. இதனால் உங்களுக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தி, உறவுகள் கசப்பாக மாறலாம்.

கண்ணாடி: பெரும்பாலும் அநேகர் தங்களின் கண்ணாடியை தலைக்கு அருகில் வைத்து தூங்குவது உண்டு. அப்படி செய்தால் அது திருமண வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும்.

தண்ணீர் பாட்டில்கள்: பொதுவாக பலர் தண்ணீர் பாட்டில்களை தங்களின் தலைக்கு அருகில் வைத்து உறங்குவது உண்டு. ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின் படி, தலைக்கு கீழ் தண்ணீர் இருந்தால் சந்திரன் பாதிக்கப்படுகிறார். இதனால் எதிர்மறை அல்லது மனநல பிரச்சனைகள் ஏற்படும்.

Maha

Next Post

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...! இந்த 14 மாவட்டத்தில் கனமழை...! வானிலை மையம் எச்சரிக்கை...!

Sat Oct 14 , 2023
தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக; இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் […]

You May Like