பழங்களின் நன்மைகளைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் பல பழங்களின் விதைகளும் ஆரோக்கியத்திற்கு ஒரு சஞ்சீவியாக செயல்படுகின்றன. இவற்றில் ஒன்று பப்பாளி. அதன் விதைகள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகவே பயன்படுகின்றன. பெரும்பாலான மக்கள் இதன் விதைகளை பயனற்றவை என்று கருதி குப்பையில் வீசுகிறார்கள். ஆனால் அவற்றின் நன்மைகளைப் பற்றி அறிந்தால், அப்படி நாம் கண்டிப்பாக செய்ய மாட்டோம். பப்பாளி விதைகளின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பப்பாளியில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளன. இது பல வழிகளில் உடலுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்றவும் உதவுகிறது. பப்பாளி விதைகளை உட்கொள்வதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். பப்பாளி விதைகளை உட்கொள்வதால் ஏற்படும் சில அற்புதமான நன்மைகள் மற்றும் அதை உட்கொள்ளும் முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பப்பாளி விதைகளை நேரடியாக உட்கொள்ள முடியாது. ஏனெனில் அவற்றின் சுவை துவர்ப்புத்தன்மை கொண்டது. ஆகையால் இவற்றை வெயிலில் காயவைத்து அரைத்து பொடி செய்து சாப்பிடுவது நல்லது. வெவ்வேறு பயன்களுக்கு பப்பாளி விதைகளை எப்படி உட்கொள்ள வேண்டும் என இங்கே காணலாம்.
பப்பாளி விதைகள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. இதில் வைட்டமின் ஏ உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. பப்பாளி விதை தூள் மற்றும் தேன் கலந்து ஹேர் மாஸ்க் தயாரிக்கவும். இது உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். பப்பாளி விதைகள் எடை இழப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது தவிர, உடலில் கூடுதல் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. இதில் காணப்படும் என்சைம்கள் எடையைக் குறைப்பது மட்டுமின்றி கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. பப்பாளி விதைகள் கல்லீரலுக்கு மிகவும் நன்மை பயக்கும். கல்லீரல் ஈரல் அழற்சியிலும் இது மிகவும் நன்மை பயக்கும். அதன் விதைகளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
பப்பாளி விதைகள் செரிமானத்திற்கும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. இதில் செரிமான நொதிகளில் நிறைந்துள்ளன. இது புரதங்களை உடைக்க உதவி அதன் இயற்கையான செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. உணவில் உள்ள விஷத்தன்மையை எதிர்த்துப் போராடவும் இது உதவும். பப்பாளி விதையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உடலில் ஏற்படும் அழற்சியை போக்க இது உதவுகிறது. மூட்டுவலி, மூட்டுவலியுடன் தொடர்புடைய வீக்கம் ஆகியவற்றை குறைக்க பாப்பைன் மற்றும் சைமோபபைன் என்சைம்கள் உதவுகின்றன.
ப்பாளி விதைகளை உட்கொள்வதற்கான சிறந்த வழி, அவற்றை பப்பாளியுடன் சேர்த்து சாப்பிடுவதாகும். விதைகளை அரைத்து, இதை சாலடுகள் அல்லது சூப்களில் சேர்த்தும் பயன்படுத்தலாம். பப்பாளி விதைகளை வெயிலில் உலர்த்தி பொடி செய்தும் சாப்பிடலாம். ஒரு நாளைக்கு 5 முதல் 8 கிராம் விதைகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். எலுமிச்சை சாறு அல்லது சாலட்டின் மீது பப்பாளி விதை தூளை தெளித்தும் உட்கொள்ளலாம்.