விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார்.. இதன் அடிப்பாடையில் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான பரிந்துரையை தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் அனுப்பி வைத்தார்..
இந்த முன்மொழிவை பரீசிலித்த தமிழக அரசு, நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.3,000-ல் இருந்து ரூ.6000ஆக முடிவு செய்துள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..