fbpx

உடல் எடையை குறைக்க இனி பட்னியாக இருக்க வேண்டாம்.., சுவையான இந்த ஜூஸ் குடித்தால் போதும்…

உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்பது பலரின் ஆசை. ஆனால் முறையாக எப்படி உடலை குறைக்க வேண்டும் என்பது பற்றி பலருக்கு தெரியவில்லை. இதனால் பெரும்பாலும் பட்னியாக கிடக்கின்றனர். இப்படி நாம் செய்வதால் நமது உடல் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்று விடும். உடல் எடையை குறைக்க மிக முக்கியமானது நாம் காலையில் சாப்பிடும் உணவுகள். இதனால் காலையில் குடிக்க இரண்டு ஸ்மூத்தி ரெசிபிகளை பற்றி நாம் பார்க்கலாம். இந்த சுவையான ஸ்மூர்த்தி குடிப்பதால் பசி தீருவதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவும்.

அன்னாசி ஸ்மூத்தி: சுவையான இந்த ஸ்மூத்தி, உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். இதற்க்கு முதலில், வாழைப்பழங்களை சிறியதாக நறுக்கி, ஃப்ரீசரில் அது கட்டியாகும் வரை வைத்து விடுங்கள். ஃப்ரீசரில் வைத்த வாழைப் பழத்தை இப்போது மிக்ஸர் ஜாரில் போட்டு, அதனுடன் தயிர் மற்றும் அன்னாசி பழம் சேர்த்து அரைத்தால் அன்னாசி ஸ்மூத்தி ரெடி.. இந்த ஸ்மூத்தியை காலை உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு பிரஷ்ஷாக தயாரித்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கீரை ஸ்மூத்தி: கீரைகள் பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் கீரை, நமது உடல் எடையை குறைப்பதற்கும் உதவும். இதனால் கீரையை பயன்படுத்தி ஸ்மூத்தி செய்து குடித்தால், உடல் எடையை எளிதாகக் குறைத்துவிட்டலாம். இந்த ஸ்மூர்த்தி செய்வதற்கு, முதலில் 10 முதல் 15 கீரை இலைகள், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன், அரை கப் தயிர், வெண்ணெய் பழம் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், இது அனைத்தையும் ஒன்றாக அரைத்து எடுத்தால் ஆரோக்கியமான கீரை ஸ்மூத்தி ரெடி.. இந்த ஸ்மூத்தியை காலையில் உடற்பயிற்சி செய்த பிறகு குடிப்பது நல்ல பலன் தரும்.

Maha

Next Post

திருவிழா தொடங்கியாச்சு!... நவராத்திரி பூஜைக்கு முன்னாடி இதை செய்ய மறந்திடாதீங்க!...

Sun Oct 15 , 2023
தமிழகத்தில் பண்டிகை காலங்கள் களைகட்ட துவங்கி விட்டது. தீபாவளி திருவிழா, தசரா விழா, நவராத்திரி விழா, கொலு பொம்மைகள், புரட்டாசி மாத பஜனைகள் என்று திரும்பும் இடமெல்லாம் நமது பாரம்பரியத்தோடு திருவிழா கொண்டாட்டங்களும் துவங்கி விட்டது. இந்த தருணத்தில், நம் குழந்தைகளுக்கும் பாரம்பரிய பண்டிகைகளையும், வழிபடும் முறைகளையும் சொல்லித் தாருங்கள். நவராத்திரியின் முதல் 3 நாட்களில் துர்க்கையாகவும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் நினைத்து […]

You May Like