fbpx

ஓட்டுநர், நடத்துனர் காலிப்பணியிடங்கள்..!! 2ஆம் கட்ட தேர்வு எப்போது..? வெளியானது அறிவிப்பு..!!

விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு 2ஆம் கட்ட தேர்வுக்கான கடிதம் அனுப்பப்படுவதாக துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் பதவிக்கான 685 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டு தகுதி பெற்றவர்களுக்கும், இணையதளம் மூலம் விண்ணப்பித்து தகுதி பெற்றவர்களுக்கும் என மொத்தம் 11,117 பேருக்கு சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து எழுத்துத் தேர்வு நடத்தியது.

இத்தேர்வில் 9,352 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கான மதிப்பெண் நவ.27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு, ஓட்டுநர் நடைமுறை தேர்வுக்காக அழைப்பு கடிதம் அனுப்பப்படுகிறது. அதன்படி, டிச.28ஆம் தேதி முதல் ஓட்டுநர் தேர்வு நடைபெறவுள்ளது” என்று தெரிவித்தனர்.

Chella

Next Post

பேருந்தில் பயணிக்கும் பெண்களே உஷார்..!! இளம்பெண்ணை மிரட்டி 2 டிரைவர்கள் பலாத்காரம்..!!

Mon Dec 18 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் லலித், முகமது ஆரிப் ஆகியோர் ஓட்டுநர்களாக இருந்தனர். பஸ்சில் இருக்கைகள் அனைத்தும் பயணிகளால் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டது. இதனால், பஸ்சில் கூட்டம் அலைமோதியது. அந்த பஸ்சில் பயணிக்க விரும்பிய சில பயணிகளுக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை. இதையடுத்து பஸ்சில் டிரைவர் அருகே உள்ள கேபினில் சில பயணிகளை 2 டிரைவர்களும் அமர வைத்தனர். […]

You May Like