fbpx

குடித்து மட்டையான யானைகள்.. அடித்து கிளப்பிய மக்கள்.. ருசிகர சம்பவம்.!

ஒடிசா பகுதியில் உள்ள கியோன்ஜர் மாவட்டத்தில் ஒரு பகுதி கிராம மக்கள் இலுப்பைப் பூவை கொண்டு சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்த செயலிற்காக கிராமத்திற்கு அருகில் உள்ள பெரிய முந்திரிக்காட்டுப் பகுதியை பயன்படுத்தி உள்ளனர். பெரிய பெரிய பானைகளில் தண்ணீரை ஊற்றி அதில் இலுப்பைப் பூக்களை போட்டு ஊறவைத்தனர். இதனை தொடர்ந்து , அடுத்த நாள் காலையில் ஊறவைத்த தண்ணீரிலிருந்து ‘மக்குவா’ என்கிற நாட்டு சாராயம் தயார் செய்வதற்காக அந்த முந்திரி காட்டுக்கு அனைவரும் சென்றிருந்தனர்.

இந்த நிலையில் அங்கே வைக்கப்பட்டிருந்த பானைகள் எல்லாம் உடைக்கப்பட்ட நிலையில், அருகிலேயே சுமார் 24 யானைகள் கொண்ட கூட்டம், ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. யானைகளை எழுப்புவதற்கு அந்த கிராம மக்கள் பெரும் முயற்சி செய்தனர். ஆனால் எழுப்பவே முடியவில்லை.

மேலும் வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பெரிய மேளங்களை அடித்து சத்தத்தை எழுப்பி யானைகள் எழ வைத்தனர். யானைகள் நிச்சயம் அந்த சாராயத்தை குடித்திருக்க வேண்டும் அதானால் தான் இப்படி உறங்கி இருக்கின்ற என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

Baskar

Next Post

நடு ரோட்டில் மனைவியை கழுத்தறுத்த கணவன்.. தூத்துக்குடியில் பரபரப்பு.!

Thu Nov 10 , 2022
தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள அண்ணா நகர் தெருவில் ஆண்டனி ராஜ் மற்றும் இவரது காதல் மனைவி மாதவியுடன் வசித்து வருகிறார். மேலும், ஆண்டனி ராஜ் மதுபோதைக்கு மிகவும் அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இன்று மதியம் ஆண்டனி ராஜ் அண்ணா நகரில் சென்று கொண்டிருந்த தனது மனைவியை வழிமறித்து அவர் கழுத்தை ஆக்ஸா பிளேடு கொண்டு அறுத்து கொலை செய்ய […]
ஆசிரியையை 101 முறை கத்தியால் குத்திக்கொன்ற முன்னாள் மாணவன்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

You May Like