fbpx

DMK | “உதயசூரியனுக்கு போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு”… சேலத்தில் தெறிக்க விட்ட உதயநிதி ஸ்டாலின்.!!

DMK: சேலம் பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு என வைத்திருக்கிறார்.

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. 18-வது பொது தேர்தலில் வாக்குப்பதிவு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன . தமிழகத்தில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக(DMK) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் உத்வேகத்துடன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் இளைஞர் நல்வாழ்வுத்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தின் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடி இருக்கிறார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் திமுகவிற்கு போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு இயற்கை பேரழிவு தமிழகத்தில் நடைபெற்ற போதும் பிரதமர் மோடி கைகட்டி வேடிக்கை பார்த்ததாக குறிப்பிட்டு இருக்கிறார். தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Read More: Annamalai | கோவையில் பரபரப்பு.!! பிரச்சாரத்தில் கேள்வி கேட்ட நபரை தாக்கிய பாஜக தொண்டர்கள்.!!

Next Post

IPL 2024: டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் புதிதாக இணைந்த வேக பந்து வீச்சாளர்!

Mon Apr 8 , 2024
ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகிய இங்கிலாந்து வீரர் ஹெரி ப்ரூக்கிற்குப் பதிலாக தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லிசாட் வில்லியம்ஸை டெல்லி கெபிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், […]

You May Like