fbpx

Earthquake..!! அந்தமானை அடுத்தடுத்து 6 முறை உலுக்கிய நிலநடுக்கம்..!! அச்சத்தில் மக்கள்..!!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று மதியம் முதல் அடுத்தடுத்து 6-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் நேற்று மதியம் 1.19 மணியளவில் 4.9 ரிக்டர் அளவில் பதிவானது. இரண்டாவது முறையாக மதியம் 2.59 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து மாலை 4.01 மணியளவில் மூன்றாவது முறையாக அந்தமான் நிக்கோபார் தீவின் கடல் பகுதியில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 5.5 மற்றும் 3.9 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 2.26 மணியளவில் 4.6 ரிக்டர் அளவில் 6-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது கேம்பெல் பே என்ற இடத்திலிருந்து 220 கிலோமீட்டர் தொலைவிலும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று மதியம் முதல் அடுத்தடுத்து 6-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ஒரு நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு + ஸ்டார்ட்அப் விருது வழங்கப்படும்...!

Mon Apr 10 , 2023
தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) 2020 ஆம் ஆண்டில் தேசிய ஸ்டார்ட்அப் விருதுகளை (NSA) அறிமுகப்படுத்தியது. இது புதுமையான தயாரிப்புகளை உருவாக்கி சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை வெளிப்படுத்தும் ஸ்டார்ட்அப் சூழலில் சிறந்த ஸ்டார்ட்அப்கள் மற்றும் செயல்படுத்துபவர்களுக்கு வெகுமதியோடு அங்கீகாரம் அளிக்கிறது. இதுவரை மூன்று முறை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பின் வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த ஸ்டார்ட்அப்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தேசிய […]

You May Like