மணிப்பூரில் நேற்று இரவு 9.30 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மணிப்பூரின் மொய்ராங் மாவட்டத்தில் இருந்து 75 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. எனவே, இதுவரை உயிர் சேதமோ, மற்ற பொருட்கள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
நிலநடுக்கத்தின் மையம் மொய்ராங்கிலிருந்து 75 கிமீ கிழக்கு-தென்கிழக்கே பதிவாகியுள்ளது. இந்த வடகிழக்கு மாநிலம் மண்டலம் அதிக நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக உள்ளது. இந்தியாவின் நில அதிர்வு மண்டல வரைபடத்தில் ஆபத்தான மண்டலமாக உள்ளது, மணிப்பூரில் இதுபோன்ற நில அதிர்வுகள் அடிக்கடி ஏற்படக்கூடும்.