fbpx

ஜப்பானை இன்று மீண்டும் குலுங்க வைத்த நிலநடுக்கம்..!! சுனாமி எச்சரிக்கையா..? பொதுமக்கள் பீதி..!!

ஜப்பானில் இன்று (ஜனவரி 9) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கிழக்காசிய நாடான ஜப்பானின், ஹோன்சு தீவில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி பிற்பகல் அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஹோன்சு தீவின் மேற்கு கடலோர மாவட்டமான இஷிகவாவை மையமாக கொண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுங்களில் அதிகபட்ச நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 வரை பதிவானது. இதனால் இஷிகவா மாவட்டத்தின் பல்வேறு நகரங்கள் பாதிப்புக்கு உள்ளாகின.

வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், புல்லட் ரயில் நிலையங்கள் என ஆயிரக்கணக்கான கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்தன. மேலும், இடிபாடுகளில் சிக்கி 125-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஜப்பானில் இன்று (ஜனவரி 9) மீண்டும் ஹோன்சு தீவின் மேற்கு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. 46 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் சுனாமி ஏற்படும் என மக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Chella

Next Post

’நீங்க வந்தா மட்டும் போதும்’..!! ’பேருக்கு தான் மசாஜ் சென்டர்’..!! ’ஆனா நடக்குறது பலான லீலை’..!! தட்டித்தூக்கிய போலீஸ்..!!

Tue Jan 9 , 2024
தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் புற்றீசல் போல் மசாஜ் சென்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதும் போலீசார் நடவடிக்கையில் ஈடுபடுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள குடிமல்காபூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு ஒன்றில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். […]

You May Like