fbpx

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் வேலை வாய்ப்பு…! 8-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த Electrician பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,000 முதல் அதிகபட்சம் ரூ.8,600 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் வயது இருக்க வேண்டியது அவசியம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு மொத்தம் பத்து காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6226e4afeb150a3a951bb304

Vignesh

Next Post

20,000 அடி உயரத்தில் பறந்து பறந்து உதைத்த பந்து..!! உலக சாதனைப் படைத்த கால்பந்து..!!

Wed Sep 28 , 2022
இருபதாயிரம் அடிக்கு மேலாக புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் விளையாடப்பட்ட கால்பந்து போட்டி, கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளது. மத்திய கிழக்கு, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 7 பிரபல கால்பந்து வீரர்களை உள்ளடக்கிய அணிகள் இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தி உள்ளன. விமானத்துக்குள் 75 சதுர மீட்டர் பரப்பு கொண்ட மைதானத்தில் இரு அணிகளும் மோதிக்கொண்ட 20,230 அடி உயரத்தில், இரு அணிகளும் புவிஈர்ப்பு விசை இல்லாத […]
20,000 அடி உயரத்தில் பறந்து பறந்து உதைத்த பந்து..!! உலக சாதனைப் படைத்த கால்பந்து..!!

You May Like