அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டில் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சோதனையின் போது எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் இருக்க துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, சைதாப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமலாக்கத்துறை எம்.பி கவுத சிகமாணிக்கு சொந்தமான ரூ. 8 கோடி சொத்துகள் ஏற்கனவே முடக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.