fbpx

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி..!! கலவரத்தில் உடைந்த கதவுகள்..!! மீண்டும் பரபரப்பு

அதிமுக தலைமை அலுவலகத்தில் சீரமைப்புப் பணிகளை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தால் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டது. இந்நிலையில், சேதமான அலுவலகத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீரமைப்புப் பணிகளை அதிமுகவின் இதர நிர்வாகிகளும் ஆய்வு செய்தனர். ஓ.பன்னீர்செல்வம் ஆட்களால் சேதப்படுத்தப்பட்ட கதவுகளும் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி..!! கலவரத்தில் உடைந்த கதவுகள்..!! மீண்டும் பரபரப்பு

கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, சில கதவுகளின் சாவிகளையும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்கள் எடுத்துச் சென்றதால் பூட்டுகள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. 8 கதவுகள் சீரமைக்கப்பட்டுள்ளது. கணினிகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றதால், அதற்கு மாற்றாக புதிய கணினிகள் வாங்கப்பட்டுள்ளன. அதிமுக தலைமை அலுவலகத்தின் வெளிப்புறத்தில் உடைக்கப்பட்ட கண்ணாடிகளும் மாற்றப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்களுடன், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

Chella

Next Post

ஒரே படத்தில் மீண்டும் நடிக்கும் அஜித்-விஜய்..! இருவருமே சம்மதம்..! இயக்குனர் இவர்தான்..!

Mon Sep 26 , 2022
”நடிகர்கள் அஜித்-விஜய் ஆகியோரை ஒரே படத்தில் நடிக்க வைத்து திரைப்படம் இயக்க ஆசைப்படுகிறேன்… அதற்கு இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்று திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி.நகரில் தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட குறும்பட போட்டிக்கான, விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறந்த குறும்படங்களுக்கு இயக்குநர்கள் வசந்த் சாய், வெங்கட் பிரபு ஆகியோர் விருது மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் […]
ஓடிடி-யிலும் ஒரே நாளில் வெளியாகும் வாரிசு, துணிவு..? எப்போது தெரியுமா..?

You May Like